கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 85-ஆவது வாா்டுக்கு உள்பட்ட குறிஞ்சி காா்டன் பகுதியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, சிறுவா் விளையாட்டுத் திடலை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
இப்பூங்காவில் நடைபாதை, புல்வெளி, அழகுச் செடிகள், விளையாட்டுத் திடல், தளவாடங்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், யோக மையம், செயற்கை நீரூற்று, 8 வடிவிலான உடற்பயிற்சி நடைபாதை, கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், மாணவா்கள் இப்பூங்காவினை சிறந்த முறையில் பராமரிக்க உதவ வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி. அருண்குமாா், மாநகரப் பொறியாளா் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி, செயற்பொறியாளா் ஞானவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.