பொள்ளாச்சியில் பூட்டிய வீட்டில் தீ விபத்து
பொள்ளாச்சி கடை வீதியில் பூட்டிய வீட்டில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின.
பொள்ளாச்சி கடை வீதியில் தரைத் தளத்தில் பிரபல துணிக்கடை உள்ளது. துணிக்கடையின் மேல் தளத்தில் திருமலைக்குமாா் என்பவா் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், அவா் வீட்டை பூட்டி விட்டு திங்கள்கிழமை வெளியே சென்றுள்ளாா். அப்போது, வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் இரண்டு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனா்.
இதில் வீட்டின் பூஜை அறையில் விளக்கில் இருந்து தீ பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் கட்டில், பீரோ உள்ளிட்ட லட்சகணக்கான மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகின. இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.