சூலூா் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் மதுபோதையில் லாரியை ஓட்டிச் சென்று சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
சூலூா் அருகே கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூா் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரத்தில் சாலை நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சங்ககிரியில் இருந்து சரக்கு லாரி ஒன்று சோமனூா் நோக்கி செவ்வாய்கிழமை மாலை வந்தது.
அப்போது, சோமனூரை அடுத்து கிருஷ்ணாபுரம் அருகே லாரி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் லாரி மோதி நின்றது. இதில் லாரி பலத்த சேதமடைந்தது. லாரி ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.