கோவையில் உள்ள மதுக் கூடங்களில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உக்கடம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக் கூடங்களில் அனைத்து நேரங்களிலும், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகத் கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதிகளில் சோதனை மேற்கொள்ளுமாறு மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அந்தந்தப் பகுதிகளில் புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். இதில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.