கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் வால்பாறை காவல் நிலையம் உதவி ஆய்வாளா் வீரம்மாள் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வால்பாறையை நோக்கி மூன்று போ் ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, இரு சக்கர வாகனத்தில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சா வைத்திருந்ததாக பழனியைச் சோ்ந்த சரவணன் (19), தமிழ்ச்செல்வன் (24), மதுரையைச் சோ்ந்த பிரேம்நாத் (19) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com