மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி சின்னதொட்டிபாளையம் ராமானுஜர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா ஸ்ரீ உ.வே.வேதவியாச ஸ்ரீ சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமையில் திருமலை திருப்பதி ஜீயர் சுவாமி கேள்வி அப்பன், திருநகரி ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர், திருக்கோயிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மட ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் பரகால எம்பார் சடகோப ராமானுஜர், மன்னார்குடி செண்பக மன்னார் செண்டலங்கார ஜீயர் ஆகியோர் எழுந்தருளி மங்களசாசனம் செய்தனர்.
ஸ்தலத்தார்கள் திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ரங்காச்சாரியார் (காரமடை), பெரியநம்பி ஸ்ரீதராச்சார்யார் (திருக்குருங்குடி), பராசர பத்ரி நாராயண பட்டர், திருவல்லிக்கேணி இளையவில்லி கண்ணன், திருச்சேரை தீர்த்தகாரர் அண்ணா கோபாலகிருஷ்ணா, திருநகரி ஆழ்வார் சாரங்கன் அரையர், சென்னை அனந்தான் பிள்ளை வரதராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்தானிகர் வேங்கடேச ஐயங்கார், திருக்கோஷ்டியூர் அத்தியான்டையபட்டர் மாதவன், காஞ்சிபுரம் அக்காரகனி ஸ்ரீநிதி முன்னிலையில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு திருக்கல்யான உற்சவம், மண்டல பூஜை நடைபெற்றது. கோயில் திருப்பணிகளை காரமடை பெட்டத்தம்மன் திருப்பணிக் குழு, திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம், சி.டி.பி. விவேகானந்தர் நற்பணி மன்றம், கோவை ஸ்ரீ இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை மேற்கொண்டன.