மது விற்பனை: இருவர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். 

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். 
வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றபோது, மதுபாட்டில் விற்பனை செய்ததாக டோபி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் (57) என்பவரைக் கைது செய்தனர். இதேபோல, புதுமார்கெட் பகுதி அம்மா உணவகம் அருகே மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சோலையாறு எஸ்டேட்டைச் சேர்ந்த கரீம் (48) என்பவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்த 69 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com