அன்னூர் குளத்தில் குப்பை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு

அன்னூர் குளத்தில் குப்பை கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனர்.

அன்னூர் குளத்தில் குப்பை கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனர்.
அன்னூரில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்தக் குளத்தை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் இணைந்து கடந்த சில வாரங்களாக தூர்வாரி அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி வருகின்றனர். இந் நிலையில் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை டிராக்டர் மூலம் சேகரித்து ஊராட்சி நிர்வாகம் இந்தக் குளத்தில் கொட்டியது. 
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும்  குளம் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் குளத்தில்  குப்பை கொட்ட வந்த டிராக்கடரை சிறைபிடித்தனர். மேலும் குளத்தில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கொட்டப்பட்ட குப்பைகளை அதே டிராக்டரில் மீண்டும்  எடுத்துச் சென்றனர். மேலும், இனி குப்பைகளை குளத்தில் கொட்டக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com