வால்பாறையில் ரூ.20 கோடி செலவில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க முடிவு

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துளளது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துளளது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டம்  அதிகரித்து காணப்படுகிறது. போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் இருளில் மனித வன விலங்கு மோதல்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்த நிலையில் வால்பாறை நகர் மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் 51 சிறிய உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com