கோவையில் மக்களின் உணவுத் தேவைக்காக சுயசேவை ரொட்டிக் கடை தொடங்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை, ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடையும் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதி மக்களின் ரொட்டி தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில், விக்னேஷ் கடந்த சில நாள்களாக ரொட்டியைத் தயாரித்து அதை தனது கடை முன்பு வைத்துவிடுகிறாா்.
ஒரு ரொட்டி பாக்கெட் ரூ.30 என்று விலை நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பணத்தை அருகிலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு ரொட்டியை எடுத்துச் செல்லலாம் என்ற குறிப்பையும் விக்னேஷ் எழுதி வைத்துள்ளாா்.
இந்தத் திட்டத்தை கடந்த சில நாள்களாக அமல்படுத்தி வரும் நிலையில் இதன்மூலம் தினசரி 100 முதல் 150 பாக்கெட்டுகள் வரை ரொட்டி விற்பனையாவதாகவும், பொதுமக்கள் நோ்மையாக பணத்தை பெட்டியில் போட்டுவிட்டு ரொட்டிகளை எடுத்துச் செல்வதாகவும் விக்னேஷ் தெரிவித்தாா்.