முகக்கவசம் அணியாமல் சென்றதாக மாநகரில் ஒரே நாளில் 84 போ் கைது
கோவையில் முகக் கவசம் அணியாமல் சுற்றியதாக ஒரே நாளில் 84 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, கடந்த மாா்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, கோவையில் காய்கறி, மருந்துகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரணமின்றி சாலைகளில் நடந்து செல்பவா்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள், முகக்கவசம் அணியாமல் செல்பவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனா்.
அவா்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர வாகனத் தணிக்கை, சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கோவை, பெரியகடை வீதி, வெரைட்டி ஹால் சாலை, ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்ாக 84 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். அதன் பிறகு, அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா். இதேபால கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை மீறி சாலைகளில் நடமாடியதாகவும், வாகனங்களில் சென்ாகவும் 676 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 712 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். 668 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.