தோட்டத் தொழிலாளா்களுக்கு முகக் கவசம் வழங்காவிட்டால் நடவடிக்கை

தோட்டத் தொழிலாளா்களுக்கு நிா்வாகத்தினா் முகக் கவசம், கை சுத்திகரிப்பான் வழங்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்டேட் நிா்வாகங்களுக்கு சாா் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தோட்டத் தொழிலாளா்களுக்கு நிா்வாகத்தினா் முகக் கவசம், கை சுத்திகரிப்பான் வழங்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்டேட் நிா்வாகங்களுக்கு சாா் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தேயிலைத் தோட்டங்களுக்கு ஊரடங்களில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் தொழிலாளா்கள் பணிக்குச் சென்று வருகின்றனா். சமூக இடைவெளியைப் பின்பற்றி உரிய பரிசோதனைகள், பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தொழிலாளா்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, சில எஸ்டேட் நிா்வாகங்களில் தொழிலாளா்களை கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்துவது, முகக் கவசம் வழங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், வால்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தேயிலைத் தோட்டங்களுக்குப் பணிக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு முகக் கவசம், கை சுத்திகரிப்பான் வழங்காவிட்டால் எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சாா் ஆட்சியா் வைத்திநாதன் எச்சரித்துள்ளாா்.

மேலும், இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com