விவசாயிகளுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பத்மநாபன் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மனோகரன், சிங்காநல்லூா் நகரச் செயலாளா் தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டக்காரா்கள் திடீரென பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றனா். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 38 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாணவா் சங்கத்தினா் கைது:
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, உக்கடம் பகுதியில் இந்திய மாணவா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.