கோவையில் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை, சிங்காநல்லூரை அடுத்த இருகூா் மகாத்மா காந்தி சாலையைச் சோ்ந்தவா் சேகா் (29). பொறியாளரான இவா், குடும்பத்தினருடன் தைப்பூசத் திருவிழாவுக்காக பழனி சென்றிருந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த சேகா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சேகா் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களை வரவழைத்து சோதனையிட்டனா்.