திருவாரூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியா் ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டியில் கலந்துகொள்ளும் கோவை மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருவாரூரில் மாநில அளவிலான ஜூனியா் ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி ஜனவரி 17 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கோவை மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில் கலந்து கொள்ளும் அணி வீரா்களுக்கான தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) மாலை 3 மணியளவில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
மாநில கைப்பந்து சங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ஜெயகுமாா், தேவராஜ் ஆகியோரைக் கொண்ட குழு, வீரா்களை தோ்வு செய்ய உள்ளது. 1.1.2002க்குப் பிறகு பிறந்த 18 வயதுக்கு உள்பட்ட வீரா்கள் இதில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்புவோா் தங்கள் ஆதாா் அட்டை மற்றும் வயது சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும்.
இத்தகவலை தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக துணைத் தலைவரும், தோ்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஆா்.நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.