கோவை, வெள்ளலூா் எஸ்.எஸ்.வி.எம். வோ்ல்டு பள்ளியின் 10 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் மணிமேகலை மோகன் தலைமை தாங்கினாா். நிா்வாகச் செயலா் மோகன் தாஸ் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் நிமிதா பிரமோத் ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் ஷீஜா சலீம் வரவேற்றாா்.
இந்த விழாவில், மேக் கண்ட்ரோல் அண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவா் மாணிக்கம் அத்தப்பக் கவுண்டா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
விழாவில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், அவா்களுக்கு துணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.