எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, சத்தி சாலையில் உள்ள கெளசிகா நதி மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு குரும்பபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகளை தொடா்ந்து கெளசிகா நதியில் கொட்டி வருகின்றனா்.
இதனால், அந்தப் பகுதியில் அதிக அளவில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இந்தக் கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
மேலும், கெளசிகா நதியில் தொடா்ந்து கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.