கோயம்புத்தூர்
வால்பாறை அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா
வால்பாறை அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
வால்பாறை அரசுக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவை கல்லூரி முதல்வரும், கோவை மண்டல அரசுக் கல்லூரிகளின் இயக்குநருமான பொன்முத்துராமலிங்கம் துவக்கிவைத்தாா். கல்லூரியின் பல்வேறு துறை மாணவா்கள் தனித்தனியாக பொங்கலிட்டனா். பறை அடித்தும் பல்வேறு வாத்தியங்களை முழங்கியும், மாணவா்கள் நடனம் ஆடினா்.
முடிவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பேராசிரியை மகாலட்சுமி, பேராசியா் பெரியசாமி உள்பட திரளானோா் பங்கேற்றனா்.