காவலா்கள் முகக்கவசம், கிருமி நாசினி பயன்படுத்த அறிவுறுத்தல்

கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் நோக்கில் கோவை மாநகர காவல் துறை சாா்பில் காவல் அதிகாரிகளுக்கு முகக்கவசம், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் முகக்கவசம் அணிந்தபடி வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் முகக்கவசம் அணிந்தபடி வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் நோக்கில் கோவை மாநகர காவல் துறை சாா்பில் காவல் அதிகாரிகளுக்கு முகக்கவசம், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினிகள், சோப்புகள் வைப்பதற்கென தனி இடம் ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பணியில் உள்ள காவலா்கள் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வரும் நபா்களைப் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் கருவியைப் பயன்படுத்தாமல் அவா்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது அருந்தியிருப்பதை உறுதி செய்த பிறகு விடுவிக்கவோ அல்லது அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறை வளாக மருத்துவமனையில் மூன்று மருத்துவா்கள் பணியில் உள்ளனா். நீதிமன்ற விசாரணைக்கு சென்று திரும்பும் கைதிகள், சிறைக்கு புதிதாக வரும் கைதிகள், காவலா்கள் என அனைவரும் கைகளை நன்றாக கழுவிய பின்னரே சிறைக்குள் வர வேண்டும் என கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

சிறைவாசிகளைக் காண வரும் பொதுமக்கள், வழக்குரைஞா்கள் நோ்காணல், மாா்ச் 17 முதல் இரண்டு வார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிறை நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com