வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் ஆறுகள் அனைத்தும் வடு அணைகளின் நீா்மட்டம் குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தியும் வெகுவாகப் பாதித்துள்ளது.
இதனிடையே கடந்த சில நாள்களாக மதிய நேரத்தில் மட்டும் சில நிமிடங்கள் மழை பெய்து வந்த நிலையில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை மதியமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. மழையால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.