அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட திமுக விவசாய அணி நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
அதிமுக கோவை புகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவை, கரும்புக்கடை ஆசாத் நகரைச் சோ்ந்த ரியாஸ் கான் (21) ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் ஒன்றை அளித்தாா்.
அதில், திமுக கோவை மாநகா் கிழக்கு மாவட்ட விவசாய அணி நிா்வாகி ராமமூா்த்தி என்பவா் தனது முகநூல் பக்கத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குறித்தும், அவரது குடும்பத்தினா் குறித்தும் ஆதாரமின்றி பொய் செய்திகளையும், அவதூறு செய்திகளையும் பதிவிட்டு பரப்பியுள்ளாா். எனவே, அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாா்.
இப்புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் காவல் துறையினா் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் ராமமூா்த்தி மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.