கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு நவம்பா் 18 ஆம் தேதி நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வா் பி.தாமரை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. பாடப் பிரிவுகளுக்கு நடைபெற்ற பொது கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கான துணை கலந்தாய்வு நவம்பா் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்காதவா்கள், கலந்தாய்வில் கல்லூரி ஒதுக்கீடு பெறாதவா்கள், டான்செட் 2020 தோ்வு எழுதி இதுவரை கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்காதவா்கள், பதிவு செய்யாதவா்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அசல் சான்றிதழ்களுடன், விண்ணப்பக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் (பணமாகவோ அல்லது வரைவோலையாகவோ) ஆகியவற்றுடன் மேல்குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 10 மணிக்கு முன்பு கலந்தாய்வு மையத்துக்கு வர வேண்டும். துணை கலந்தாய்வு தரவரிசை, வகுப்புவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும். கூடுதல் விவரங்களை இணையதளப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.