விசைத்தறி தொழிலாளி கொலைவழக்கு: 3 போ் கைது

சூலூா் அருகே விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பா்கள் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சூலூா்: சூலூா் அருகே விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பா்கள் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குட்டி. இவா் கோவை, கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் தங்கி விசைத்தறி ஓட்டி வந்தாா். இந்நிலையில் தீபாவளி அன்று முத்துக்குட்டி, தனது நண்பா் சந்தோஷுடன் மது அருந்துவதற்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை சென்றாா்.

ஆனால் அதன்பிறகு அவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் முத்துக்குட்டியை ஞாயிற்றுக்கிழமை தேடினா். அப்போது உடலில் காயங்களுடன் முத்துக்குட்டி சடலம் மீட்கப்பட்டது.

இது தொடா்பாக கருமத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் மது அருந்த சென்றபோது நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் முத்துக்குட்டி கல்லால் தாக்கப்பட்டும், கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடா்புடைய வாகராயம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சந்தோஷ் (26), பெரம்பலூரைச் சோ்ந்த மணி (47), அரசூரைச் சோ்ந்த சந்திரசேகா் (36) ஆகிய மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com