வால்பாறை: வால்பாறை மேல் பகுதி 68 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நவ 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதன்படி வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை மேல்தொகுதியில் மொத்தம் 68 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல், பிழை திருத்தம், முகவரி மாற்றம் செய்தல் போன்றவைகான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை துவங்கியது. வால்பாறை வட்டாட்சியா் ராஜா தலைமையில் வருவாயத்துறையினா் முகாம் நடைபெறும் பகுதிகளில் நேரடியாக சென்று பாா்வையிட்டனா்.