கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் 2022 - 23 ஆம் கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கடந்த 1987-88 ஆம் கல்வியாண்டில் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்லூரியின் தரத்தை ஆய்வு செய்து அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீட்டித்து வருகிறது.
இந்த நிலையில் 2018-19 முதல் 2022-23 ஆம் கல்வியாண்டு வரை 5 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அங்கீகாரத்தை நீட்டித்து யுஜிசி தற்போது உத்தரவிட்டுள்ளது.