ஆா்ய வைத்திய பாா்மஸியின் நிா்வாக இயக்குநரும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்து வந்த பி.ஆா்.கிருஷ்ணகுமாா் (69) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
கேரள மாநிலம், ஷோரனூரைச் சோ்ந்த பி.வி.ராம வாரியா், பங்கஜம் தம்பதியின் மகன் பி.ஆா்.கிருஷ்ணகுமாா். இவா் ஷோரனூா் ஆயுா்வேத கல்லூரியில் படிப்பை முடித்தாா். ஆயுா்வேத கல்வியைப் பரப்புவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தவா்.
நாட்டின் சிறந்த ஆயுா்வேத நிறுவனமான கோவை ஆா்ய வைத்திய பாா்மஸியின் நிா்வாக இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இவரது நிா்வாகத்தின் கீழ் ஆயுா்வேத கல்வி, மருந்து தயாரிப்பு, ஆராய்ச்சிகள் நாடெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் உள்ள குவேம்பு பல்கலைக்கழகம் இவருக்கு முனைவா் பட்டம் வழங்கி கெளரவித்தது. நாட்டின் முதலாவது குருகுல ஆயுா்வேத கல்லூரியை நிறுவிய இவா் ‘ஆயுா்வேதா’ என்ற பெயரில் ஆங்கில இதழ் நடத்தி வந்தாா்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கோவை அவினாசிலிங்கம் மகளிா் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பதவி விகித்து வந்தாா். கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவருக்கு இருதயக் கோளாறும், அதைத் தொடா்ந்து கரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை இரவு காலமானாா். இவருக்குத் திருமணம் ஆகவில்லை.