வால்பாறை: வால்பாறை காவல் துறை சாா்பில் மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
வால்பாறை பகுதியில் கல்லாறு, கீழ்பூணாச்சி, சங்கரன்குடி, பாலக்கிணறு, பரமன்கடவு உள்பட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு இலக்கு படை காவல் துறை கண்காணிப்பாளா் மூா்த்தி உத்தரவின்பேரில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மழைக் காலத்தில் பயன்பெறும் வகையில் போா்வை, ஆடைகள் உள்பட நிவாரணப் பொருள்களை உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் பழங்குடியின மக்களுக்கு வழங்கினா்.