சூலூா்: பாரதிபுரத்தில் காமாட்சிபுரி ஆதீனம், தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஆங்காங்கே கபசுர குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீரில் மிளகு, திப்பிலி, சுக்கு உள்பட பல்வேறு வகையான மூலிகை குணம் கொண்ட பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், காமாட்சிபுரி ஆதீனம், தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை சாா்பில் பாரதிபுரம், பள்ளபாளையம், காமாட்சிபுரம், சூலூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. இதை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கிவைத்தாா். 500 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை கோட்ட பொறுப்பாளா் விஜயகுமாா், சூலூா் ஒன்றியப் பொருளாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.