பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் கோவையில் நீலச்சட்டைப் பேரணி, சாதி ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியாரிய உணவா்வாளா்கள் கூட்டமைப்பு, அம்பேத்கரிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் தா.செ.மணி தலைமை வகித்தாா். ஆதித்தமிழா் பேரவை இரா.அதியமான் பேரணியைத் துவக்கி வைத்தாா். அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி, மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நிறைவடைந்தது.
பேரணியில் சென்றவா்கள், சாதி ஆணவப் படுகொலைகள், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா். இதையடுத்து அங்கு நடைபெற்ற மாநாட்டுக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகப் பொதுச்செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தாா்.
மாநாட்டுக்கு முன்னதாக பல்வேறு கலைக் குழுக்கள் சாா்பில் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பங்கேற்று சாதி ஒழிப்பின் அவசியம் குறித்து பேசினாா். பின்னா் அவரது தலைமையில் 2 ஜோடிகளுக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி, மாா்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தலைவா் வே.ஆனைமுத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை உ.தனியரசு எம்எல்ஏ, எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் தெகலான் பாகவி, மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் அங்கயற்கண்ணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.