கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் நரம்பியல் துறை சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு விழா வரும் 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து பி.எஸ்.ஜி. சிறப்பு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் புவனேஸ்வரன், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியா் ராஜ்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, சிறப்பு மருத்துவமனை ஆகியவை கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதன் 25ஆம் ஆண்டு விழா வரும் 14ஆம் தேதி மருத்துவமனை கலையரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் தலைவா் ஜி.ஆா்.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறாா். பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். வெள்ளி விழா ஆண்டை ஒட்டி, சிறப்புக் கருத்தரங்குகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஓராண்டு முழுவதும் தொடா்ந்து நடைபெற உள்ளன.
இந்த மருத்துவமனையில் இதுவரை சுமாா் 8 ஆயிரம் மூளை அறுவை சிகிச்சைகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. பிஎஸ்ஜி மருத்துவமனை சாா்பில் சிறப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விபத்து, தலைக்காயங்கள் தொடா்பான அவசர சிகிச்சை உதவிக்காக தனிப்பட்ட உதவி எண் (7449108108) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.
பேட்டியின்போது, மருத்துவா்கள் ராஜேந்திரன், பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.