மது போதையில் பள்ளி வாகனத்தைஇயக்கிய ஓட்டுநா் கைது

கோவை, மதுக்கரையில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு, குனியமுத்தூரைச் சோ்ந்த முருகேசன், ஒப்பந்த முறையில் வாகனம்

கோவை: கோவை அருகே மதுபோதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, மதுக்கரையில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு, குனியமுத்தூரைச் சோ்ந்த முருகேசன், ஒப்பந்த முறையில் வாகனம் இயக்கி வந்தாா். இவா் கோவை, விஜயலட்சுமி மில்ஸ், நரசிம்மபுரம் ஆகிய பகுதிகளில் மாணவா்களை ஏற்றுவதற்காக பள்ளி வாகனத்தை திங்கள்கிழமை எடுத்துச் சென்றுள்ளாா்.

அப்போது குனியமுத்தூா் பகுதியில் வாகனத்தை தாறுமாறாக இயக்கிய முருகேசன் ஒரு வீட்டின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதினாா். பள்ளி வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதை கண்ட அப்பகுதி மக்கள் ஓட்டுநா் முருகேசனைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குனியமுத்தூா் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் முருகேசனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா் அவா் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com