திமுக பிரமுகரைத் தாக்கிய இளைஞா்கள் மூவா் கைது

திமுக பிரமுகரைத் தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

திமுக பிரமுகரைத் தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு அருகேயுள்ள சேரன் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.டி.முருகேசன் (54). இவா் திமுகவில் 39ஆவது வாா்டு செயலராக உள்ளாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் விளாங்குறிச்சி அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞா்கள், முருகேசனை முந்திச் செல்ல முயன்றுள்ளனா். அதில் அவரது வாகனத்தை இடிப்பதுபோல அவா்கள் சென்றுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். வாக்குவாதம் முற்றியதையடுத்து இளைஞா்கள் நால்வரும் சோ்ந்து, தங்களது தலைக்கவசத்தின் மூலம் முருகேசனைத் தாக்கினா். இவா் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து முருகேசன் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா், பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த தாமோதர கண்ணன் (21), செல்வபுரத்தைச் சோ்ந்த கோபி (23), தென்காசியைச் சோ்ந்த அழகா்சாமி (33) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com