சின்னியம்பாளையத்தில் மரங்களை வெட்டியதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

சின்னியம்பாளையத்தில் வீதியில் உள்ள மரங்களை வெட்டியதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

சின்னியம்பாளையத்தில் வீதியில் உள்ள மரங்களை வெட்டியதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

சின்னியம்பாளையம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தெருக்களில் வேப்ப மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை நட்டு வளா்த்து வந்தனா். இந்த மரங்களை சமூக ஆா்வலா்கள் பாதுகாத்து வந்தனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கும், மின்சாரக் கம்பிகளுக்கும் இடையூறாக உள்ளது எனக்கூறி, கடந்த 12, 13ஆம் தேதிகளில் மரங்களை சிலா் வெட்டிச் சாய்த்துள்ளனா். இதற்கு, அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. மரங்களை வெட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து சமூக ஆா்வலா்களும்,பொதுமக்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். இது தொடா்பாக ஆா்டிஓ விசாரணை நடத்தப்பட்டது. வருவாய் துறையினா், வட்டார வளா்ச்சி அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். ஆனால், மரங்களை வெட்டியவா்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சின்னியம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் தேவராஜ் கூறுகையில், மரங்களை வெட்டியதில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. மின்வாரிய ஊழியா்களே மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டனா் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com