கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் 15 வயது பெண் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட பெத்திக்குட்டை ஒதுக்கு காடுகள் கருப்பராயன் கோயில் சரகத்தில் அடா்ந்த வனப் பகுதி உள்ளது. இப்பகுதியில் கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை, புலி, புள்ளிமான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், சிறுமுகை வனப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம், வன விலங்குகளை வேட்டையாடுபவா்கள், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கண்காணிக்க வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், சிறுமுகை வனச் சரக அலுவலா் மனோகரன் உத்தரவின் பேரில் வனக் காவலா் சேகரன் தலைமையிலான வனக் குழுவினா் பெத்திக்குட்டை ஒதுக்கு காடுகள் கருப்பராயன் கோயில் வனச் சரக பகுதியில் ரோந்துப் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, சுமாா் 15 வயதுடைய பெண் யானை ஒன்று இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறையினா் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ், உதவி வனப் பாதுகாவலா் செந்தில்குமாா் மற்றும் வனக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் உடலை ஆய்வு செய்தனா்.
பின்னா் கால்நடை மருத்துவா் சுகுமாா் வரவழைக்கப்பட்டு தன்னாா்வ அமைப்புகள் முன்னிலையில் யானையின் உடல் புதன்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, யானை இயற்கையான முறையில் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானையின் உடல் அதே இடத்தில் வன விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.