தில்லியில் உள்ள ஜவாஹா்லால் பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கோவையில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம், திமுக வழக்குரைஞா்கள் சங்கம், சமூகநீதி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் கே.எம்.தண்டபாணி தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் அருள்மொழி, வெண்மணி, மலரவன், மாசேதுங் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினா்.
இதில் ஜவாஹா்லால் பல்கலை. மாணவா்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலின்போது உரிய நடவடிக்கை எடுக்காத தில்லி போலீஸாா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.