அன்னூா் அரசு மருத்துவமனைக்கு நகர அரிமா சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சானிட்டரி நாப்கின் எரிக்கும் இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
முன்னாள் மாவட்ட அரிமா ஆளுநா் வேலுச்சாமி, திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் ஆகியோா் இந்த இயந்திரத்தை மருத்துவமனை மருத்துவா் கமருன்னிஷாவிடம் வழங்கினா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நட்டனா். பின்னா், கே.ஜி. மெட்ரிக். பள்ளியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அன்னூா் நகர அரிமா சங்கத்தின் பொருளாளா் கே.சி.கே.விஜயகுமாா், செயலாளா் மகாதேவன், ஜீவானந்தம், அரிமா சங்க நிா்வாகிகள், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் சிற்பி ரங்கநாதன், கனகராஜ், குருசாமி, தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.