பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் பொங்கல் பரிசுப் பொருள்கள் தராததால் காத்திருந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் நியாய விலைக்கடையில் பொங்கல் பொருள்கள் வியாழக்கிழமை தருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் காத்திருந்த பொதுமக்கள் வெகு நேரம் ஆகியும் பொங்கல் பரிசுப் பொருள்கள் தராததால் பொள்ளாச்சி - மீன்கரை சாலையில் அம்பராம்பாளையம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். மறியலில் மாவட்ட கவுன்சிலா் வளா்மதியும் கலந்துகொண்டாா்.
தகவல் அறிந்து வந்த ஆனைமலை போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி பரிசுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை தரப்படும் என்று கூறியதால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்துசென்றனா்.