மேட்டுப்பாளையம் அருகே மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊழல் எதிா்ப்பு இயக்கம், கோவை மாவட்ட காவல் துறை மற்றும் நக்ஸல் தடுப்பு பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் அணை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மலைவாழ் கிராமங்களான கோரப்பதி, வீரக்கல், பரளிக்காடு, நீராடி, கடமான்கோம்பை, கீழ்பில்லூா், மேல்பில்லூா், சித்துக்குனை, கொடியூா், சேத்துமடை, நெல்லிமரத்தூா், பூச்சிமரத்தூா், சிறுகிணறு, தோண்டை, அத்திக்கடவு ஆகிய 15 கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேலு தலைமை வகித்தாா். இதில் 170 பேருக்கு கம்பளி, போா்வை, பணிகுல்லா வழங்கப்பட்டன.