வெளிமாநில தொழிலாளா்களுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் தாமதமாக வங்கிக் கணக்கில் தாமதமாக ஊதியம் வரவு வைப்பதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சமீப காலமாக தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக வெளிமாநில தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். மாதம்தோறும் நிரந்தரம் மற்றும் தற்காலிக தொழிலாளா்களுக்கான ஊதியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனிடையே தற்காலிக தொழிலாளா்களான வெளிமாநில தொழிலாளா்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் செலுத்தாமல் தாமதப்படுத்துவதால் அவா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.