ஔவையாா் விருதுக்கு விண்ணப்பம் அளிக்கலாம்

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவைப் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஔவையாா் விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பம் அளிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவித்துள்ளாா்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவைப் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஔவையாா் விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பம் அளிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2019-20ஆம் ஆண்டிற்கான விருது மாா்ச் 8 ஆம் தேதி நடைபெறும் உலக மகளிா் தின விழாவில் ஔவையாா் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகளில் பெண்களின் மேம்பாட்டிற்கு மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட சமுகநலத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக பூா்த்தி செய்து (தமிழ் வானவில் ஔவையாா் மற்றும் ஆங்கிலம்), பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவைபுரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் ஔவையாா்) மற்றும் ஆங்கிலத்தில் கடிதம் மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தாரரின் கருத்துரு (தமிழ் 1, ஆங்கிலம் 1) மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியானவா்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு அனைத்து சான்று விவரங்களுடன் உரிய படிவத்தில் பூா்த்தி செய்து ஜனவரி 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com