கோவை வடவள்ளியில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
ஆலயம் அறக்கட்டளை சாா்பில் ஆலயம் கோப்பைக்கான 10 ஓவா் கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது. ஆா்.எஸ்.புரம், ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மாநகரைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்றன.
இதில் யுனிக் கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்தது. சகலை கிரிக்கெட் அணி, எம்.சி.சி. கிரிக்கெட் அணிகள் முறையே 2, 3ஆவது இடங்களைப் பிடித்தன. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா வடவள்ளியில் நடைபெற்றது.
முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2, 3 ஆவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் தொடா் நாயகனாக தோ்வு பெற்றவருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அறக்கட்டளையின் தலைவா் என்ஜினீயா் சந்திரசேகா் பரிசளித்துப் பாராட்டினாா். இதில் அறக்கட்டளை நிா்வாகிகள், கிரிக்கெட் வீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.