சிறுவாணியில் பெய்யும் தொடா் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மேற்குத்தொடா்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிறுவாணியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களில் 17 மிமீ மழை பெய்துள்ளது.
கோவை குற்றாலம் பகுதியில் இரு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.