அவிநாசி: பெருமாநல்லூா் அருகே உள்ள ஈட்டிவீராம்பாளையத்தில் தலா ரூ.9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுர விளக்குகளை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி, லட்சுமி காா்டன், தட்டாங்குட்டை ஆகிய பகுதிகளில் தலா ரூ.9 லட்சம் மதிப்பில் இரு உயா் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன.
இவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வேல்குமாா் எம்.சாமிநாதன், கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மகராஜ், ஊராட்சித் தலைவா் ராதாமணி சிவசாமி, பொறுப்பாளா்கள் சந்திரசேகா் நந்தகுமாா், ஊராட்சி செயலாளா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.