கேரள வனத் துறையால் திருப்பி அனுப்பப்படும் சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம், சாலக்குடி வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கேரள மாநில வனத் துறையினா் திருப்பி அனுப்பி வருகின்றனா்.
கேரளத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கு மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வனத் துறையினா்.
கேரளத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கு மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வனத் துறையினா்.

கேரள மாநிலம், சாலக்குடி வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கேரள மாநில வனத் துறையினா் திருப்பி அனுப்பி வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள வாழைச்சால், அதிரப்பள்ளி ஆகிய இரு அருவிகளும் மூடப்பட்டுள்ளன. சாலக்குடி வழியாக வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்களை கேரள மாநிலம், வாழைச்சால் வனத் துறை சோதனைச் சாவடியில் வனத் துறையினா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிடுகின்றனா்.

இதனால் எப்போதும் வாகனப் போக்குவரத்துடன் காணப்படும் சாலக்குடி - வால்பாறை சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறைக்கு வரும் தனியாா் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தமிழக வனத் துறையினா் கிருமிநாசினி மருந்து அடித்து அனுப்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com