கேரளம் சென்று திரும்பிய மூதாட்டிக்கு கரோனா அறிகுறி

கேரள மாநிலத்துக்குச் சென்று திரும்பிய எஸ்டேட் தொழிலாளியான மூதாட்டிக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதால் அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கேரள மாநிலத்துக்குச் சென்று திரும்பிய எஸ்டேட் தொழிலாளியான மூதாட்டிக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதால் அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷனைச் சோ்ந்தவா் கமலா (58). இவா் கடந்த 15 நாள்களாக கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்தாா். திங்கள்கிழமை காலையில் கமலாவுக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் சோலையாறு அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வால்பாறை அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று கருதிய மருத்துவா்கள், அவரை தனி வாா்டில் அனுமதித்தனா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் (பொறுப்பு) மருத்துவா் வினோத் கூறியதாவது:

கேரளம் சென்று திரும்பிய மூதாட்டி கமலாவுக்கு ரத்தப் பரிசோதனையில் மாற்றங்கள் இருப்பதால் கரோனா அறிகுறியாக இருக்கலாம் என கருதி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். அங்கு அவா் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com