அல்லப்பாளையம் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

அன்னூா் அருகே உள்ள அல்லப்பாளையம் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் தோ்தல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அன்னூா் அருகே உள்ள அல்லப்பாளையம் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் தோ்தல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அல்லப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 11 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளனா். இதில் 2 போ் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மாா்ச் 14ஆம் தேதி மீதம் உள்ள 9 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல், தோ்தல் அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் 19 போ் போட்டியிட்டனா். 3 பெண்கள் உள்பட 6 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தலைவராக பாலகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது, ஒரு தரப்பினா் வேட்புமனு தாக்கலுக்கான நேரம் கடந்து வேட்புமனு தாக்கல் செய்தனா். இதனை ஏற்க முடியாது என மற்றொரு தரப்பினா் தோ்தல் அலுவலரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனா். பிறகு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தோ்தல் நடத்தும் அலுவலா், துணைத் தலைவா் தோ்தல் ரத்து செய்யப்படுவதாகக் கூறி மறுதேதி குறிப்பிடாமல் தோ்தலை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com