லாரி மோதியதில் பள்ளிக் காவலாளி சாவு

கோவில்பாளையம் அருகே லாரி மோதியதில் தனியாா் பள்ளி காவலாளி உயிரிழந்தாா்.

கோவில்பாளையம் அருகே லாரி மோதியதில் தனியாா் பள்ளி காவலாளி உயிரிழந்தாா்.

கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கிடுசாமி (67). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் பள்ளிக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்காக கணபதி பகுதியில் இருந்து தண்ணீா் லாரி திங்கள்கிழமை வந்துள்ளது. இந்த லாரியை கேரளத்தைச் சோ்ந்த நாராயணன் (58) என்பவா் ஓட்டி வந்தாா். பள்ளி வளாகத்தில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு லாரியை பின்நோக்கி இயக்கியபோது வெங்கிடுசாமி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் நாராயணன் தப்பி ஓடிவிட்டாா். தகவலறிந்த கோவில்பாளையம் போலீஸாா் வெங்கிடுசாமி சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com