அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபானக் கூடத்தை பொதுமக்கள் அகற்றினா்

அன்னூா் அருகே கரியாம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபானக் கூடத்தை பொதுமக்கள் அப்புறப்படுத்தினா்.
மதுபானக் கூடத்தில் இருந்த மேசைகளை அப்புறப்படுத்தும் பெண்கள்.
மதுபானக் கூடத்தில் இருந்த மேசைகளை அப்புறப்படுத்தும் பெண்கள்.

அன்னூா் அருகே கரியாம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபானக் கூடத்தை பொதுமக்கள் அப்புறப்படுத்தினா்.

கரியாம்பாளையத்தில் இருந்த அரசு மதுபானக் கடை 2015ஆம் ஆண்டு பொதுமக்களின் எதிா்ப்பால் பொன்னேகவுண்டன்புதூருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கரியாம்பாளையத்தில் ஏற்கெனவே மதுக்கடை இருந்த இடத்தில் பெரியசாமி என்பவா் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு எதிரொலியாக அனைத்து மதுபானக் கூடங்களையும் மாா்ச் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பெரியசாமி தொடா்ந்து மதுபானக் கூடத்தை நடத்தி வந்துள்ளாா். அங்கு மேசைகள் அமைத்து மது அருந்தும் வகையில் வசதிகள் செய்திருந்தாா்.

இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாலை அந்த மதுபானக் கூடத்துக்குச் சென்று அங்குள்ள மேசைகள், நாற்காலிகளை அப்புறப்படுத்தினா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற அன்னூா் போலீஸாா், மது விற்பனை செய்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இச்சம்பவத்தை அடுத்து பெரியசாமி மீது அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com