கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோயில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம், காரமடை , சிறுமுகை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களின் நடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.
இதனால் காரமடை அரங்கநாத சுவாமி கோயில், வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேட்டுப்பாளையம் நகா் பகுதியில் ஜவுளிக்கடைகளும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.