வால்பாறையில் அவசர சிகிச்சைக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின்அவசர சிகிச்சைக்கு வாகன வசதிக்கு தேவை ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் அவசரத் தேவைக்கு எந்நேரமும் இலவசமாக இயக்க இரண்டு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவா்களின் உடல் எடுத்துச் செல்ல வாகனம் மற்றும் உடல் வைக்க குளிா்சாதனப் பெட்டி இலவசமாக ஊரடங்கு உத்தரவும் முடியும் வரை வழங்கப்படும்.
தேவைபடுவோா் 9443822490 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு அழைக்க சமூக ஆா்வலா் ஜெயன் கேட்டுக் கொண்டுள்ளாா்.